ஐபிஎல் இருந்து விலகும் பும்ரா? மாற்று வீரர் இவர்தான்... மும்பை இந்தியன்ஸ் முடிவு?
இந்திய வீரர் ஜஸ்பரீத் பும்ராவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், ஐபிஎல் 18ஆவது சீசனில் இருந்து கூட பும்ரா விலகும் நிலை ஏற்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய வீரர் ஜஸ்பரீத் பும்ராவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், ஐபிஎல் 18ஆவது சீசனில் இருந்து கூட பும்ரா விலகும் நிலை ஏற்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பரீத் பும்ரா, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், மற்ற பௌலர்களின் பந்துகள் தாக்கத்தை ஏற்படுத்தாத காரணத்தினால், தொடர்ச்சியாக அதிக ஓவர்களை வீசி வந்தார்.
இந்நிலையில், 5ஆவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் பந்துவீசி பும்ரா, கடைசி இன்னிங்ஸின்போது சில பந்துகளை மட்டும் வீசிவிட்டு, மருத்துவமனைக்கு விரைந்தார்.
அதன்பிறகு, பும்ரா பந்துவீச வராத நிலையில், பும்ரா அதிக நேரம் பந்துவீசியதால், அவரது முதுகு பகுதியில் இருக்கும் தசைகள் வீக்கம் அடைந்து காணப்பமுவதாக தெரிவிக்கப்பட்டது.
இதனால், பும்ரா அடுத்து இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களில் பங்கேற்க மாட்டார் என்றும், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கூட அரையிறுதி, இறுதிப் போட்டியில்தான் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து, பும்ரா முழுமையாக வெளியேறிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளதுடன், பும்ராவை, பரிசோதித்த பிசிசிஐ மருத்துவக்குழு பிசிசிஐயிடம் அறிக்கை சமர்பித்து இருக்கின்றது.
பும்ராவின் முகுது பகுதியில் ஏற்பட்டுள்ள வீக்கம் முழுமையாக குணமடைந்த இன்னமும் 2 மாதங்கள் வரை ஆகலாம். அதுவரை பும்ரா, வீட்டில் ஓய்வு எடுத்தாலே போதும். இரண்டு மாதங்களுக்குள் அவர் மீண்டும் விளையாடினால், மீண்டும் வீக்கம் ஏற்படும். பும்ராவுக்கு கட்டாயம் 2 மாதங்கள் ஓய்வு தேவை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், ஐபிஎல் தொடரில் இருந்து கூட பும்ரா விலக அதிக வாய்ப்புள்ள நிலையில், பும்ராவுக்கு மாற்றாக 2 வீரர்களை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் தேர்வு செய்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஒருவேளை பும்ரா விலகினால், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்ளி அல்லது வலது கை வேகப்பந்து வீச்சாளரான அஸ்வானி குமார் ஆகிய இருவரில் ஒருவரை அணிக்குள் கொண்டுவர மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.