துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளான டான் பிரியசாத் உயிரிழப்பு

துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான டான் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளான டான் பிரியசாத் உயிரிழப்பு

துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான டான் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

அரசியல் செயற்பாட்டாளர் டொன் பிரியசாத் நேற்று இரவு (22) வெல்லம்பிட்டி, மீதொட்டமுல்ல பகுதியில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

'லக்சந்த செவன' அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டிலேயே பிரியசாத் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட காயமடைந்த பிரியசாத்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக நேற்றிரவு செய்தி வெளியானது.

எனினும், பொலிஸார் அதனை மறுத்திருந்த நிலையில், டான் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக இன்று (23) பொலிஸார் அறிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.