விளையாடி கொண்டிருந்த போது, நெஞ்சுவலி.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வீரர்!
வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தமீம் இக்பாலுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் களத்தில் சுருண்டு விழுந்தார்.

கிரிக்கெட் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில், வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தமீம் இக்பாலுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் களத்தில் சுருண்டு விழுந்தார்.
36 வயதான தமீம் இக்பால், அண்மையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த நிலையில் டாக்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் விளையாடினார்.
அப்போது பில்டிங் செய்து கொண்டிருந்த தமீம் இக்பால், திடீரென்று களத்தில் நிற்க முடியாமல் அமர்ந்துவிட்டார். இதனையடுத்து அங்கிருந்து மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
அதனையடுத்து, அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் மூலம் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதையும் படியுங்கள்: ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட்.. ரோகித் சர்மா செய்த மோசமான சாதனை!
தமீம் இக்பாலுக்கு கிரிக்கெட் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த போது நெஞ்சுவலி ஏற்பட்டது. அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு இசிஜி எடுக்கப்பட்டது. அவருக்கு இதயத்தில் சில பிரச்சனை இருப்பது தெரியவந்துள்ளது. முதலில் அவருக்கு ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டது.” என, இது குறித்து விளக்கம் அளித்துள்ள வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைமை மருத்துவ நிபுணர் டெபாசிஸ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.