ஹர்திக் பாண்டியாவால் இறுதிப்போட்டியில் ஆட முடியுமா? பிசிசிஐ வெளியிட்ட தகவல் இதோ!
ஹர்திக் பாண்டியா பெரிய ஷாட்டிற்கு முயற்சித்து ஆட்டமிழந்தார். இந்திய அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இந்திய அணியில், தவிர்க்க முடியாத வீரராக ஹர்திக் பாண்டியா ஒரு முழுநேர வேகப்பந்து வீச்சாளர் இடத்தையும், ஒரு முழுநேர துடுப்பாட்ட வீரரின் இடத்தையும் அவர் நிரப்புகிறார்.
இதனால்தான், சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில், ஸ்பின்னர்களுக்கு சாதகமான பிட்சில், ஒரேயொரு முழுநேர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியை மட்டும் விளையாட வைக்க முடிகிறது. ஹர்திக் பாண்டியா பக்கபலமாக பந்துவீசி வருகிறார்.
சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியாவுக்கு, காலில் தசைபிடிப்பு ஏற்பட்டது. நாதன் எல்லிஸ் வீசிய 48ஆவது ஓவரில், ஹர்திக் பாண்டியா பந்தை அடித்துவிட்டு, இரண்டாவது ரன் ஓட முயற்சி செய்வார்.
ஆனால், கே.எல்.ராகுல் வேண்டாம் எனக் கூறியதும் ஹர்திக், உடனே திரும்பி, பௌலர் முனைக்கு செல்வார். அப்போது, உடனே திரும்பியபோதுதான், ஹர்திக்கிற்கு காலில் அடி பட்டது.
இதனைத் தொடர்ந்து, ஹர்திக் பாண்டியா பெரிய ஷாட்டிற்கு முயற்சித்து ஆட்டமிழந்தார். இந்திய அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டியானது, மார்ச் 9ஆம் தேதி இடம்பெறவுள்ளது.
இந்த நிலையில், அரையிறுதியின்போது காயம் காரணமாக அவதிப்பட்ட ஹர்திக் பாண்டியாவின் பிட்னஸ் எப்படி இருக்கிறது என்பது குறித்து, தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
ஹர்திக் பாண்டியா தற்போது முழு உடல்நலத்துடன் இருக்கிறாராம். தசைபிடிப்பு உடனே சரியாகிவிட்டதால் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் விளையாட, ஹர்திக் பாண்டியாவுகுக எந்த பிரச்சினையும் இருக்காது என பிசிசிஐ தெரிவித்துள்ளது.