அணிக்கு திரும்பும் சுப்மன் கில்.. வெளியேற போவது யார்? ஏற்பட்டுள்ள சிக்கல்!

அணிக்கு திரும்பும் சுப்மன் கில்.. வெளியேற போவது யார்? ஏற்பட்டுள்ள சிக்கல்!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி எதிர்பாராத தோல்வி அடைந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டிபுனே நகரில்  வரும் வியாழக்கிழமை தொடங்குகிறது. 

3 போட்டிகள் கொண்ட தொடரில் ஒன்றுக்கு 0 என்ற கணக்கில் இந்திய அணி தற்போது பின்தங்கி உள்ள நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது.

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 46 ரன்களில் ஆட்டம் இழந்ததே தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றது.

Also Read: அதிருப்தியில் ஸ்ரேயாஸ் ஐயர்... அணியிலிருந்து விலகல்? யாருமே எதிர்பார்க்காத சம்பவம்!

இந்த நிலையில், கழுத்து வலி காரணமாக கடந்த போட்டியில் சுப்மன் கில் விளையாடாத நிலையில் தற்போது அவரது வலி குணமடைந்து இருக்கிறது. இதனால், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பிளேயிங் லெவனில் கில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன், கில் அணிக்கு திரும்புவதால் தற்போது இந்திய அணியில் மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. கில்லுக்கு பதிலாக விளையாடிய சர்ஃபிராஸ் கான் 150 ரன்கள் விளாசி அசத்தினார். சீனியர் வீரரான கே எல் ராகுல் டக் அவுட் மற்றும் 12 ரன்கள் தான் எடுத்தார். 

இதனால் கேஎல் ராகுல் நீக்கப்பட்டு சர்பராஸ்கான் சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில், கே எல் ராகுலுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க ரோகித் சர்மாவும் கௌதம் கம்பீரம் முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.

இதனால், கில் அணிக்கு வந்தால் சர்பராஸ்கான் தான் அணியை விட்டு செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதுடன், அவ்வாறு இல்லை என்றால், மூன்று சுழற் பந்துவீச்சாளர்களுக்கு பதில் இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களை வைத்து இந்தியா விளையாடினால் சர்பராஸ்கானுக்கு அணியில் இடம் கிடைக்கும் என்று கூறப்படுகின்றது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...