இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட நான்கு முக்கிய வீரர்கள்! வாய்ப்பை வீணடித்த பிசிசிஐ!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்திய தேசிய அணி, இந்திய ஏ அணியுடன் மோத உள்ளது.

இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட நான்கு முக்கிய வீரர்கள்! வாய்ப்பை வீணடித்த பிசிசிஐ!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்திய தேசிய அணி, இந்திய ஏ அணியுடன் மோத உள்ளது.

அத்துடன், மூன்று பயிற்சி ஆட்டத்துக்காக ருதுராஜ் தலைமையிலான இந்திய ஏ அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

இந்திய ஏ அணியில் சிறப்பாக விளையாடும் வீரர்களை, இந்திய அணியில் உள்ள முன்னணி வீரர்கள் காயம் அடைந்தால் அல்லது சரியாக விளையாடாவிட்டால்,  மாற்று வீரர்களை தேர்வு செய்ய வாய்ப்பு கிடைக்கும்.

இந்த நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ஸ்ரேயாஸ் ஐயர், புஜாரா மற்றும்  ரகானே ஆகியோர் இந்திய ஏ அணியில் இடம் பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

அத்துடன், நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 150 ரன்கள் விளாசிய சர்பராஸ் கான்,  இந்திய ஏ அணியில் இடம் பிடிப்பார் என்று கருதப்பட்டது. 

ஆனால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அணியில் அனுபவ வீரர்கள் மற்றும் இளம் நட்சத்திர வீரர்கள் என யாருமே சேர்க்கப்படவில்லை. 

சர்பராஸ் கான், கில், ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற இளம் வீரர்களை பிசிசிஐ இந்திய ஏ அணியுடன் அனுப்பி பயிற்சி செய்ய வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 

எனினும், இந்திய டெஸ்ட் அணியில் மாற்று தொடக்க வீரராக இடம்பெற வாய்ப்பு இருக்கும் ருதுராஜ், அபிமன்யூ ஈஸ்வரன்,சாய் சுதர்சன் போன்ற வீரர்கள் இந்திய ஏ அணியில் இடம் பெற்றுள்ளனர்.

இதனால், பார்டர் கவாஸ்கர் தொடரில் ஒரு டெஸ்டில் ரோகித் சர்மா விளையாட மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளதுடன், அவருக்கு பதில் ருதுராஜ் அல்லது ஈஸ்வரன் என இருவரில் ஒருவர் விளையாட வாய்ப்பு உள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...