தூள் கிளப்பும் ரச்சின் ரவீந்திரா.. சென்னைக்கு அணிக்கு வாய்ப்பு... மகிழ்ச்சியில் சிஎஸ்கே ரசிகர்கள்!
கடந்த சீசனில் சிஎஸ்கே அணிக்காக 10 போட்டியில் விளையாடி மொத்தமாக 222 ரன்கள் அடித்த போதும், இந்த சீசனில் ரச்சின் ரவீந்திரா அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மார்ச் 22ஆம் தேதி தொடங்க உள்ளதுடன், இந்த தொடருடன் தோனி விடைபெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, ஆறாவது முறையாக சிஎஸ்கே அணி கோப்பையை வென்று தோனியை வெற்றியுடன் வழி அனுப்புமா என ரசிகர்கள் காத்துக்கொண்டு உள்ளனர்.
இந்த நிலையில், ஐபிஎல் தொடருக்கு இரண்டு வாரமே உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் ரச்சின் ரவீந்திரா பந்துவீச்சில் எதிரணியை தவிக்க விட்டு வருகின்றார்.
நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிராக ரச்சின் ரவீந்திரா சதம் விளாசி உள்ளார்.
அத்துடன், பந்துவீச்சிலும் திறமையை காட்டிய ரச்சின் ரவீந்திரா இந்த தொடரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி ரன்களையும் கட்டுப்படுத்தி இருக்கிறார்.
மேலம், இந்த தொடரில் அதிக ரன்கள் எடுத்ததற்கான தொடர் நாயகன் விருதையும் ரச்சின் ரவீந்திரா தனதாக்கியதுடன், சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய பலமாக ரச்சின் ரவீந்திரா மாறி இருக்கிறார்.
கடந்த சீசனில் சிஎஸ்கே அணிக்காக 10 போட்டியில் விளையாடி மொத்தமாக 222 ரன்கள் அடித்த போதும், இந்த சீசனில் ரச்சின் ரவீந்திரா அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, ஐசிசி தொடரில் ரச்சின் இதுவரை 5 சதம் அடித்துள்ள அவர், தான் அடித்த முதல் 5 சதமுமே ஐசிசி தொடரில் தான் என்ற மகத்தான சாதனையை படைத்திருக்கிறார்.
இதற்கு முன் எந்த ஒரு வீரரும் தங்களுடைய முதல் ஐந்து சதத்தை ஐசிசி தொடரில் அடித்ததில்லை என்ற நிலையில், சிஎஸ்கே அணிக்காக ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட்டுடன் தொடக்கத்தில் களமிறங்கி ரன்களை குவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், பந்து வீச்சிலும் ரச்சின் தனது திறமையை வெளிகாட்டுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.