ரோகித், கோலிக்கு வழங்கப்பட்ட கடைசி வாய்ப்பு... அணிக்கு திரும்பிய இரண்டு நட்சத்திர வீரர்கள்!

ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

ரோகித், கோலிக்கு வழங்கப்பட்ட கடைசி வாய்ப்பு... அணிக்கு திரும்பிய இரண்டு நட்சத்திர வீரர்கள்!

ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

முதலாவது டி20 போட்டி ஜனவரி 11ஆம் தேதி மொகாலியிலும், இரண்டாவது டி20 போட்டி  ஜனவரி 14ஆம் தேதி இந்தூரிலும், மூன்றாவது டி20 போட்டி ஜனவரி 17ஆம் தேதி பெங்களூரிலும் நடைபெறுகிறது.

இந்த தொடரின் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா அறிவிக்கப்பட்டுள்ளதுடன்,  இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியும் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

இதன் மூலம் 14 மாதங்களுக்குப் பிறகு ரோகித் சர்மா இந்திய டி20 அணிக்கு கேப்டனாக திரும்பியதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

வரும் ஜூன் மாதம் டி20 உலக கோப்பை நடைபெற உள்ள நிலையில் இந்திய அணியின் இரு நட்சத்திர வீரர்களும் அந்தத் தொடரில் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால், தற்போது ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் இவ்விருவரும் அறிவிக்கப்பட்டு இருப்பதால் டி20 உலக கோப்பையில் ரோகித் சர்மாவும் விராட் கோலி விளையாடுவது உறுதியாகி உள்ளது.

இந்திய அணி 2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு எந்த ஒரு ஐசிசி கோப்பையும் வெற்றிக்கொள்ளவில்லை,பல டி20 உலக கோப்பையும் தவறவிட்டது. 

ரோகித் சர்மாவும், விராட் கோலியும் தங்களுடைய கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் உள்ளதுடன், இவர்கள் மீண்டும் ஒரு உலக கோப்பையில் விளையாடுவது என்பது சந்தேகமே.

இதனால் டி20 உலக கோப்பையில் இந்தியாவுக்கு கோப்பையை வென்று தருவது இவர்கள் இருவருக்குமே முக்கியமான விடயமாக பார்க்கப்படுகிறது. 

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...