ரோஹித் சர்மாவுக்கு என்ன ஆச்சு? 5வது முறையாக வங்கதேசத்திற்கு எதிராக சொதப்பல்!

வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸிலும் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 5 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றியுள்ளார். 

ரோஹித் சர்மாவுக்கு என்ன ஆச்சு? 5வது முறையாக வங்கதேசத்திற்கு எதிராக சொதப்பல்!

சென்னை: வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸிலும் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 5 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றியுள்ளார். 

இந்த தோல்வியால் அவர் தொடர்ச்சியாக 5வது முறையாக வங்கதேசத்துக்கு எதிராக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

முதல் இன்னிங்ஸில் இந்தியா 376 ரன்கள் குவித்த பிறகு, வங்கதேசம் 149 ரன்களில் ஆல் அவுட் ஆனது. வங்கதேசத்திற்கு ஃபாலோ ஆன் கொடுக்க மறுத்து ரோஹித் சர்மா இந்திய அணியைக் களமிறக்க முடிவு செய்தார். 

ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் அவர் வெறும் 5 ரன்களில் டஸ்கின் அஹ்மத் பந்தில் ஆட்டமிழந்தார், மேலும் அவருடைய தொடர் மோசமான ஆட்டம் ரசிகர்களை கவலைக்கு உள்ளாகியுள்ளது.

வங்கதேசத்திற்கு எதிரான 5 முந்தைய இன்னிங்ஸ்களில் ரோஹித் 6, 6, 21, 6, 5 ரன்களை மட்டுமே எடுத்துள்ளதனால், அவருடைய பேட்டிங் தொடர்பில் அதிக விமர்சனத்தை எழுப்பியுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...