750 எபிசோடு முடிந்தவுடன் டிவி சீரியல் நடிகை திடீர் விலகல்!
சன்டிவியின் ஆனந்த்ராகம் சீரியலில் நடித்து வந்த நடிகை, தற்போது திடீரென விலகியதாக அறிவித்துள்ளார்.

சன்டிவியின் ஆனந்த்ராகம் சீரியலில் நடித்து வந்த நடிகை, தற்போது திடீரென விலகியதாக அறிவித்துள்ளார்.
சன்டிவியில் கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கிய ஆனந்த ராகம் சீரியல் தொடக்கத்தில் டி.ஆர்.பி ரேட்டிங்கில், முன்னணியில் இருந்து வந்தது.
எனினும், நேர மாற்றம் காரணமாக வீழ்ச்சியை சந்தித்திருந்தாலும், விறுவிறுப்பான திரைக்கதையின் காரணமாக ஓரளவு வரவேற்பை பெற்று வருகிறது.
அக்கா தங்கை வாழ்க்கையை மையமாக வைத்த இந்த சீரியலில், அக்கா ஈஸ்வரி தங்கை அபிக்காக என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடிய ஒரு கேரக்டரில் நடித்துள்ளார். தங்கை கேரக்டரில் நடிகை ஸ்வேதா நடித்து வருகிறார்.
வாய் பேச முடியாத பெண்ணாக நடித்து வந்த ஸ்வேதா தற்போது இந்த சீரியலில் இருந்து விலகியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஆனந்த்ராகம் சீரியலின் ஒரு பகுதியாக இனி இருக்க மாட்டேன். 750 எபிசோட்டுடன் என்னுடைய சாப்டர் முடிகிறது.
என்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான தருணம் இனி வரப்போகிறது அதற்காக நான் எந்த சினிமா வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன் என்று தனது பதிவில் வெளியிட்டுள்ளார்.