இந்திய அணியின் பயிற்சியாளர்கள் திடீர் நீக்கம்! பின்னணியில் இருப்பது யார்?
நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் 0-3 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி, தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரையும் இழந்தது.

தற்போது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணியில் சில அதிரடி மாற்றங்களை செய்துள்ளது பிசிசிஐ.
அண்மையில் நடைபெற்ற சில டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி மோசமாக விளையாடியதால் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்ல முடியாத நிலையில், தற்போது துணை பயிற்சியாளர் அபிஷேக் நாயரை பிசிசிஐ நீக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அவர் இந்த பதவியில் நியமிக்கப்பட்டு எட்டு மாதங்கள் மட்டுமே ஆகின்றதுடன், இதுவரை இரண்டு முறை நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் இந்தியா விளையாடியது. ஆனால் இந்த ஆண்டு இறுதி போட்டிக்கு கூட செல்ல தவறியது.
நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் 0-3 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி, தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரையும் இழந்தது.
இதன் காரணமாக இந்திய அணியில் பல அதிரடி மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிசிசிஐயில் நடந்த விவாதங்களுக்கு பிறகு சில முக்கிய மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி அடுத்த டெஸ்ட் தொடருக்கு முன்பு இந்திய அணியில் உள்ள பயிற்சியாளர்களை மாற்ற திட்டமிட்டுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு ஜூன் மாதம் இந்திய அணி இங்கிலாந்துக்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கின்றது.
இதில் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் மற்றும் உதவி பயிற்சியாளர் ரியான் டென் டோஷேட் மட்டுமே இடம் பெற உள்ளனர்.
துணை அபிஷேக் அபிஷேக் நாயர், பீல்டிங் பயிற்சியாளர் திலீப் மற்றும் கண்டிஷனிங் பயிற்சியாளர் சோஹம் தேசாய் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. அதே போல பிசிசிஐயின் சம்பளப் பட்டியலிலும் பெரிய மாற்றங்கள் வர உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி அதிக சம்பளம் வாங்கியும் சரியாக விளையாடாத வீரர்கள் குறைவான சம்பளத்திற்கு மாற்றப்பட உள்ளதுடன், இது தொடர்பாக எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.
டெஸ்ட் தொடர்களில் தோல்வியடைவது சாதாரணமான விஷயம் என்றாலும் இந்திய அணி வீரர்கள் மனதில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணமே இல்லாதது போல் இருந்ததுடன், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி தொடர் முழுவதும் ரன்கள் அடிக்க மிகவும் சிரமப்பட்டனர்.
முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றிருந்தாலும் அடுத்தடுத்த போட்டிகளில் மோசமாக விளையாடியதுடன், பார்டர் கவாஸ்கர் தொடர் முழுக்க சிறப்பாக விளையாடாத ரோகித் சர்மா கடைசி டெஸ்ட் போட்டியில் தானே அணியிலிருந்து விலகிக் கொண்டார்.
அதற்கு முன்பு இந்தியாவில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி இழந்ததுடன், இந்திய அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமில் நடக்கும் விஷயங்கள் அதிகமாக இணையத்தில் வெளியானது. இதன் காரணமாகவும் துணைப் பயிற்சியாளர்கள் நீக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.