நான் இம்பாக்ட் வீரர் இல்லை... தோனி அதிரடி பேச்சு... என்ன சொல்கிறார் தெரியுமா?

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனில் இதுவரை 4 போட்டிகள் முடிவடைந்துள்ளன. குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் அகமதாபாதில் இன்று மோதுகின்றன.

நான் இம்பாக்ட் வீரர் இல்லை... தோனி அதிரடி பேச்சு... என்ன சொல்கிறார் தெரியுமா?

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனில் இதுவரை 4 போட்டிகள் முடிவடைந்துள்ளன. குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் அகமதாபாதில் இன்று மோதுகின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கியுள்ளதுடன், மும்பைக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸை சிஎஸ்கே 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்த நிலையில், அந்த அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி இம்பாக்ட் பிளேயர் விதி குறித்து பேசியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் இம்பாக்ட் பிளேயர் விதி அறிமுகப்படுத்தப்பட்டபோது, அந்த விதி உண்மையில் தேவையற்றதாக உணர்ந்தேன். ஒரு விதத்தில் இம்பாக்ட் பிளேயர் விதி எனக்கு உதவியது. 

ஆனால், அதே நேரத்தில் அந்த விதி எனக்கு தேவையற்றதாகவும் இருந்தது. நான் போட்டிகளில் தொடர்ந்து விக்கெட் கீப்பிங் செய்கிறேன். நான் இம்பாக்ட் பிளேயர் கிடையாது. நான் தொடர்ந்து ஆட்டத்தில் ஈடுபட வேண்டிய அவசியமிருக்கிறது.

இம்பாக்ட் பிளேயர் விதியினால் அதிக ரன்கள் குவிக்க முடிவதாக கூறுகிறார்கள். ஆனால், ஆடுகளங்களின் தன்மை மற்றும் வீரர்கள் எந்த அளவுக்கு நன்றாக விளையாடுகிறார்கள் என்பதைப் பொருத்தே அதிக ரன்கள் வரும்.

நமது மனநிலையைப் பொருத்தே போட்டியில் ரன்கள் குவிப்பது அமைகிறது. கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைப்பதால், அதிரடியாக விளையாடி ரன்கள் குவிக்க வேண்டும் என்ற மனநிலைக்கு அணிகள் வருகின்றன என்றார்.

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா இருவரும் இம்பாக்ட் பிளேயர் விதியை ஏற்கெனவே விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.