பிளே ஆஃப்க்கு செல்லப் போகும் 4 அணிகள் எவை தெரியுமா? எந்த அணிகள் தகுதி பெறும்... விவரம் இதோ!

பெங்களூரு அல்லது ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஏதேனும் ஒரு வெற்றியைப் பெற்றால் குஜராத் அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லலாம். 

பிளே ஆஃப்க்கு செல்லப் போகும் 4 அணிகள் எவை தெரியுமா? எந்த அணிகள் தகுதி பெறும்... விவரம் இதோ!

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடரிலிருந்து முதல் அணியாக டெல்லி அணி வெளியேறி இருக்கிறது. பஞ்சாப் அணி தற்போது 12 புள்ளிகளை பெற்றிருப்பதால் புள்ளி பட்டியலில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

16 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் குஜராத் அணியை பிளே ஆப் சுற்றுக்கு இன்னும் செல்லவில்லை. இந்த நிலையில் எந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் என்பதை பார்க்கலாம்.

பெங்களூரு அல்லது ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஏதேனும் ஒரு வெற்றியைப் பெற்றால் குஜராத் அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லலாம். 

எனினும், இரண்டு போட்டிகளிலும் தோற்று விட்டால் மற்ற அணிகள் தயவு தேவைப்படும். 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை எஞ்சிய இரண்டு போட்டிகளில் ஒன்றல் வெற்றி பெற்றால் போதும்.

மும்பை அணி 14 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. அவர்கள் எஞ்சிய இரண்டு ஆட்டத்தில் ஒன்றின் வெற்றி பெற்றால் கூட 16 புள்ளிகளை பெற்றுவிட முடியும். அத்துடன், ரன் ரேட் அதிகமாக இருந்தால் பிளே ஆப் சுற்றுக்கு சென்று விடலாம்.

லக்னோ அணி தற்போது 13 புள்ளிகளுடன் உள்ளதுடன், மும்பை மற்றும் கொல்கத்தா அணிக்கு எதிராக இரண்டு ஆட்டங்களிலும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றது.

ராஜஸ்தான் அணி தற்போது 12 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. எஞ்சிய ஆட்டமான பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணி வீழ்த்தினால் மட்டுமே பதினாறு புள்ளிகளை பெற முடியும்.

12 புள்ளிகளுடன் பஞ்சாப் அணி ஆறாவது இடத்தில் உள்ளதுடன், டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணியை பெரும் ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தினால் மட்டுமே பிளே ஆப் வாய்ப்பு கிடைக்கும். 

பெங்களூர் அணி தற்போது 10 புள்ளிகளுடன் ஏழாம் இடத்தில் உள்ளதுடன், எஞ்சிய மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே 16 புள்ளிகளை பெற முடியும் என்பதுடன், ரன் ரேட் அதிகமாக இருக்க வேண்டும். 

அதேநேரம், கொல்கத்தா அணி எஞ்சி இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்றால் 14 புள்ளிகளை தான் பெற முடியும். எனினும் பல்வேறு போட்டிகள் அவர்களுக்கு சாதகமாக முடிய வேண்டும். ஆனால் அது நடப்பதற்கான சாத்தியங்கள் குறைவு.

ஹைதராபாத் அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் 16 புள்ளிகளை பெற முடியும். இது போன்ற மற்ற அணிகளும் 14 புள்ளிகள் மட்டுமே பெற வேண்டும். அதில் ஹைதராபாத்  அதிக நேட் ரன் ரேட்டில் அவர்கள் பிளே ஆப்க்கு முடியும். ஆனால் இதுவும் நடப்பதற்கான வாய்ப்புகள் இல்லை.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...