இந்திய அணியின் முக்கிய வீரருக்கு காயம்.. மாற்றாக வரும் இளம் வீரர்...  பிசிசிஐ கூட்டத்தில் அதிரடி முடிவு!

18ஆம் தேதியே அணியை அறிவித்த நிலையில், அந்த அணியில் இரண்டு மாற்றங்களை செய்து, புது அணியை பெப்ரவரி 11ஆம் தேதி பிசிசிஐ அறிவித்தது.

இந்திய அணியின் முக்கிய வீரருக்கு காயம்.. மாற்றாக வரும் இளம் வீரர்...  பிசிசிஐ கூட்டத்தில் அதிரடி முடிவு!

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம்பெற்ளு்ள வீரருக்கு காயம் ஏற்பட்டுள்ள நிலையில், அவருக்கு மாற்றாக மற்றுமொரு வீரரை அணியில் இணைக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியை ஜனவரி 11ஆம் தேதி அறிவக்க வேண்டும் என்ற நிலையில், 15 பேர் பட்டியலை தேர்வு செய்ய முடியாமல், பிசிசிஐ திணறியது.

அத்துடன், 18ஆம் தேதியே அணியை அறிவித்த நிலையில், அந்த அணியில் இரண்டு மாற்றங்களை செய்து, புது அணியை பெப்ரவரி 11ஆம் தேதி பிசிசிஐ அறிவித்தது.

புது இந்திய அணியில் வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா ஆகியோர் இடம்பெற்றதுடன், யாஷஸ்வி ஜெய்ஷ்வால், ஜஸ்பரீத் பும்ரா ஆகியோரை நீக்கினார்கள். இதில், ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் ஜெய்ஷ்வாலுக்கு இடம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், ரஞ்சிக் கோப்பையில் ஆடிவிட்டு, அதன்பிறகுதான் சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் யாஷஸ்வி ஜெய்ஷ்வால் இணைவார் என அறிவிக்கப்பட்டது. 

ஜெய்ஷ்வால் இடம்பெற்றுள்ள மும்பை அணி, அரையிறுதியில், பிப்ரவரி 17ஆம் தேதி விதர்பா அணியை எதிர்கொள்ள உள்ள நிலையில், காயம் காரணமாக ஜெய்ஷ்வால் அரையிறுதியில் ஆட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெய்ஷ்வாலுக்கு, கணுக்கால் காயம் ஏற்பட்டுள்ள நிலையில், அவர் குணமடைய ஒரு வாரம் ஆகலாம் என்பதால், அவரை நீக்கிவிட்டு, ரிசர்வ் பட்டியலில் வேறு வீரரை சேர்க்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில், மிடில் வரிசைக்கு பேக்கப்பாக கருண் நாயரை ரிசர்வ் பட்டியலில் சேர்க்க முடிவு செய்திருப்பதாகவும், சில தினங்களில், ஜெய்ஷ்வால் குறித்த பிட்னஸ் அறிக்கையை பிசிசிஐயிடம், மருத்துவ குழு சமர்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது, ஜெய்ஷ்வால் முழு பிட்னஸுடன் இருந்தால், அவர் ரிசர்வ் வீரராக தொடர்வார் என்றும், இல்லையேல், கருண் நாயரை துபாய்க்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக தெரிகின்றது.

சாம்பியன்ஸ் டிராபியில்,முதலில் வங்கதேசத்திற்கு எதிராகவும் அடுத்து பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்துக்கு எதிராகவும்  இந்திய அணி மூன்று லீக் போட்டிகளில் விளையாட உள்ளதுடன், இப்போட்டிகள், பெப்ரவரி 20, 23 மற்றும் மார்ச் 2 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp