நினைத்துக் கூட பார்க்காத சம்பவம்.. ரவீந்திர ஜடேஜா அசத்தல்... நடந்தது என்ன?

ஒருநாள் போட்டிகளில் மட்டும் ஜோ ரூட்டின் விக்கெட்டை ஐந்தாவது முறையாக ரவீந்திர ஜடேஜா கைப்பற்றி உள்ளதுடன்,  இரண்டு போட்டிகளிலும் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். 

நினைத்துக் கூட பார்க்காத சம்பவம்.. ரவீந்திர ஜடேஜா அசத்தல்... நடந்தது என்ன?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரில் சுழற் பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா சிறப்பாக பந்து வீசியுள்ளதுடன், இந்தத் தொடரில் இரண்டு போட்டிகளிலும் அவர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

அவர் 19 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளதுடன், யாரும் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு விடயத்தையும் அவர் செய்திருக்கிறார்.

இந்தத் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 248 ரன்கள் எடுத்ததுடன், இரண்டாவது போட்டியில் 304 ரன்கள் எடுத்தது. ஜடேஜா இரண்டு போட்டிகளிலும் தான் வீசிய 19 ஓவர்களில் 2 பவுண்டரிகளை மட்டுமே விட்டுக் கொடுத்து ஆச்சரியப்படுத்தி உள்ளார்.

முதல் போட்டியில் 9 ஓவர்கள் வீசி 26 ரன்கள் விட்டுக் கொடுத்த ஜடேஜா ஒரு மெய்டனையும் வீசி மொத்தம் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், இரண்டாவது போட்டியில் 10 ஓவர் வீசி 35 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து ஒரு மெய்டன் உட்பட 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மேலும் இந்த போட்டியில் ஜோ ரூட்டின் விக்கெட்டை வீழ்த்தியதுடன், சர்வதேச கிரிக்கெட்டில் ஜோ ரூட்டின் விக்கெட்டை 13வது முறையாக வீழ்த்தி சாதனை படைத்து இருக்கிறார். 

ஒருநாள் போட்டிகளில் மட்டும் ஜோ ரூட்டின் விக்கெட்டை ஐந்தாவது முறையாக ரவீந்திர ஜடேஜா கைப்பற்றி உள்ளதுடன்,  இந்த இரண்டு போட்டிகளிலும் சேர்த்து ஜடேஜா 19 ஓவர்களில் 61 ரன்கள் விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். 

அவரது பௌலிங் சராசரி 10.16 என்பதாகவும், எக்கனாமி 3.21 என்பதாகவும் உள்ளதுடன், ரவீந்திர ஜடேஜா தனது உச்சகட்ட ஃபார்மை எட்டி உள்ள நிலையில்,  இந்திய அணி இங்கிலாந்தை 2 - 0 என வீழ்த்தி தொடரைக் கைப்பற்றி இருக்கிறது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp