ரோஹித் ஓய்வை எப்போது அறிவிப்பார்... பிசிசிஐ வெளியிட்ட புது அப்டேட்!
ஆஸ்திரேலியா சென்று மூன்று ஒருநாள் போட்டிகளில் இந்தியா விளையாடும். அடுத்து, டிசம்பர் மாதத்தில் தென்னாப்பிரிக்க அணி, இந்தியா வந்து ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் இறுதிப் போட்டியில், நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா அபார வெற்றியைப் பெற்ற நிலையில், அடுத்து ஐபிஎல் தொடர் முடிந்தப்பிறகு இந்திய அணி, இங்கிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும்.
அத்துடன், இந்த வருடத்தில் இந்திய அணி மூன்று ஒருநாள் தொடர்களில் விளையாட உள்ளது. ஆகஸ்டில், வங்கதேசம் சென்று மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா விளையாடும்.
தொடர்ந்து, ஆஸ்திரேலியா சென்று மூன்று ஒருநாள் போட்டிகளில் இந்தியா விளையாடும். அடுத்து, டிசம்பர் மாதத்தில் தென்னாப்பிரிக்க அணி, இந்தியா வந்து ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.
இந்நிலையில், ஒருநாள் மற்றும் டெஸ்ட் பார்மெட்டில் ரோஹித் சர்மா எப்போது ஓய்வு அறிவிப்பார் என்பது குறித்து தகவல் வெளியாகி இருக்கின்றது.
விரைவில் ரோஹித் சர்மா, தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கரை சந்திக்க உள்ளார். அப்போது, ஓய்வு முடிவு குறித்து விவாதித்தப் பிறகு, ஐபிஎல் நடைபெறும் சமயத்தில், ரோஹித் சர்மா டெஸ்ட் பார்மெட்டில் இருந்து ஓய்வு அறிவிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், ஒருநாள் பார்மெட்டில் ரோஹித் விளையாடுவாரா என்பதை, அகார்கர் இன்னமும் தீர்மானிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
சாம்பியன்ஸ் டிராபி முடிந்தப் பிறகு எந்த வீரரும் ஓய்வு அறிவிப்பை வெளியிடக் கூடாது என அஜித் அகார்கர் கேண்டுகொண்டதாகவும், எந்த வீரரும் ஓய்வு அறிவிக்க விரும்பினால், முதலில் தன்னை அனுகி, விவாதித்த பிறகுதான் ஓய்வு அறிவிக்க வேண்டும் அகார்கர் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய அணிக்காக 2007ஆம் ஆண்டு முதல் விளையாடிவரும் ரோஹித் சர்மா, அதில் 48.64 சராசரியில், 32 சதம், 57 அரை சதம் உட்பட 11,092 ரன்களை குவித்திருக்கிறார்.
37 வயதாகும் ரோஹித், 55 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தி, அதில் 41 வெற்றிகளையும், 12 தோல்விகளையும் பெற்றுக்கொடுத்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் இந்திய அணிக்கு கோப்பையை பெற்றுக்கொடுத்தார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை 2023 தொடரிலும் இந்திய அணியை இறுதிப்போட்டி வரை வழிநடத்தியிருந்தார்.