விராட் கோலி ஓய்வு உறுதி? வெளியான அறிவிப்பு! கடைசியில் நடந்த டுவிஸ்ட்

ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் நடத்தும் பிக் பாஸ் லீக் தொடரில் விராட் கோலி சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தமாகி இருக்கிறார்.

விராட் கோலி ஓய்வு உறுதி? வெளியான அறிவிப்பு! கடைசியில் நடந்த டுவிஸ்ட்

ஐபிஎல் தொடரை போல ஏனைய நாடுகளின் கிரிக்கெட் வாரியம் பல்வேறு பிரிமியர் லீக் தொடர்களை நடத்தி வருகிறன. இதன் ஊடாக மூலம் பல இளம் வீரர்களுக்கு சர்வதேச போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கிறது. 

இந்த நிலையில், இந்திய அணி வீரர்களும் வெளிநாட்டிற்கு சென்று விளையாட வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இந்திய கட்டுப்பாட்டு வாரியமோ இந்திய வீரர்கள் ஓய்வு பெற்று இரண்டு ஆண்டுகள் கழித்து வெளிநாட்டு லீக் போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்படுவதாக அறிவித்திருக்கிறது. 

இந்த நிலையில், ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் நடத்தும் பிக் பாஸ் லீக் தொடரில் விராட் கோலி சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தமாகி இருக்கிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பான பதிவியை சிட்னி சிக்சர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டது. அதில், அடுத்த இரண்டு சீசன்களுக்கு விராட் கோலி சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்து விட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த செய்தி வைரலாகவே அடுத்த  சில மணி நேரங்களில் முட்டாள்கள் தினம் என பதிவிட்டு. இது உண்மை இல்லை என தெரிவித்தது. 

நேற்று ஏப்ரல் 1ஆம் தேதி என்பதால், சிட்னி சிக்சர்ஸ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. விராட் கோலி போன்ற வீரரை வைத்து இப்படியான செய்தியை வெளியிட்டால் ரசிகர்கள் நம்பிவிடுவார்கள் என சிட்னி சிக்சர்ஸ் இந்த வேலையை செய்து உள்ளது.