மனைவியை பிரிந்தார் இந்திய அணி வீரர் யுஸ்வேந்திர சாஹல்... வெளியான தகவல்!
இந்திய தேசிய கிரிக்கெட் அணி வீரர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் அவரது மனைவி தனஸ்ரீ வர்மா விவாகரத்தை அதிகாரப்பூர்வமாக பெற்றுள்ளனர்.

இந்திய தேசிய கிரிக்கெட் அணி வீரர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் அவரது மனைவி தனஸ்ரீ வர்மா விவாகரத்தை அதிகாரப்பூர்வமாக பெற்றுள்ளனர்.
அவர்கள் வியாழக்கிழமை (டிசம்பர் 20) மாலை 4 மணிக்கு இந்திய நேரப்படி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
மும்பை பாந்த்ராவில் உள்ள குடும்ப நீதிமன்றத்தில் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் தனஸ்ரீ வர்மா ஆகியோர் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தம்பதியினர் தங்கள் இறுதி நடவடிக்கைகளை நீதிமன்றத்தில் முடித்த பின்னர், அதிகாரப்பூர்வ விவாகரத்து சான்றிதழைப் பெறுவார்கள்.
யுஸ்வேந்திர சாஹல் மற்றும் தனஸ்ரீ வர்மா இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் பிரிந்து செல்ல முடிவு செய்தனர்
தம்பதியினர் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்றாலும், கடந்த சில மாதங்களாக அவர்களின் விவாகரத்து தொடர்பான பேச்சுக்கள் ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாக உள்ளன.
2020-ம் ஆண்டு இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் சாஹல் மருத்துவரான தனஸ்ரீ என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
மாடலிங்கிலும் ஈடுபட்டு வந்த தனஸ்ரீ, கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.
பின்னர் தெலுங்கு சினிமாவில் சில படங்களில் நடிக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதனிடையே சாஹல் - தனஸ்ரீ இருவரும் விவாகரத்து செய்யப் போவதாக தகவல் வெளியாகி கொண்டே இருந்தது.
2023-ம் ஆண்டிலேயே சாஹலின் பெயரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தனஸ்ரீ நீக்கினார். இருப்பினும் விவாகரத்து செய்திகளை இருவரும் மறுத்து வந்தனர்.
ஆனாலும் இவர்களின் விவாகரத்துக்கான காரணம் குறித்து எந்த விவரங்களும் வெளியிடப்படவில்லை.